ஆப்நகரம்

பொள்ளாச்சி ஜெயராமன் பதவி விலக வேண்டும் – கே.சி.பழனிசாமி

அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Mar 2019, 11:43 pm
அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil KC Palanisamy


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் நாளுக்கு நாள் தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறுகையில், பொள்ளாச்சி சம்பவம் அனைவரது மனதையும் கலங்கடித்துள்ளது. முதல்வா் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டாலும், அதனை மக்கள் ஏற்கவில்லை.

இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே இதே போன்ற வழக்கில் சைலேந்திரபாது எடுத்த நடவடிக்கைகள் சரியானது. அதே போன்று தற்போதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதிமுக பெண் வாக்காளா்களை அதிகம் கொண்ட கட்சி. ஜெயலலிதா இருந்திருந்தால் எதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமோ அதே நடவடிக்கை தற்போதும் எடுக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி ஜெயராமன் மிகவும் நல்லவா். ஆனால், தோ்தல் நேரத்தில் இப்படி நடக்கக் கூடாது.

பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய முதல்வா் வலியுறுத்த வேண்டும். அதிமுகவுக்கு அவப்பெயா் ஏற்பட்டுவிடக் கூடாது எனில் பொள்ளாச்சி ஜெயராமன் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வா் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி