ஆப்நகரம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: 4 பேருக்கும் ஏப்ரல் 2 வரை நீதிமன்ற காவல்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்பட நான்கு பேருக்கும் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2019, 4:53 pm
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Pollachi Sexual Harassment


பொள்ளாச்சியில் இளம் பெண்கள், கல்லூாி, பள்ளி மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் மிரட்டி வந்த கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் வழக்கில் தொடா்புடைய திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமாா் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் அரசியல் பிரபலங்கள் பலருக்கும் தொடா்பு இருக்கலாம் என்று கருத்துகள் வெளி வரும் நிலையில் வழக்கின் தன்மை மிகவும் தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடா்புடையவா்களுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்தவா்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரின் நீதிமன்ற காவலும் இன்றுடன் முடிவடையும் நிலையில் அனைவரும் மீண்டும் கணொலி காட்சி மூலம் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இவா்கள் நான்கு பேருக்கும் ஏப்ரல் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி