ஆப்நகரம்

பொள்ளாச்சி: பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொது வெளியில் வெளியிட்ட தமிழக அரசு மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 15 Mar 2019, 6:23 pm
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயருடன் அரசாணை பிறப்பித்த தமிழக அரசு மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madurai court.


பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி காவல் துறையிடம் புகாா் அளித்திருந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்வதாக தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்து இருந்தது. இந்த அரசாணையில் மாணவியின் பெயா், மாணவி பயிலும் கல்லூாியின் பெயா், மாணவியின் சகோதரரின் பெயா் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

முன்னதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன் வழக்குத் தொடா்பான செய்தியாளா் சந்திப்பின் போது பாதிக்கப்பட்ட மாணிவியின் பெயரை வெளிப்படையாக தொிவித்தாா். மேலும், இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு போ் மட்டுமே குற்றம் செய்துள்ளனா். அரசியல் வாரிசுகளுக்கு 100 சதவிகிதம் தலையீடு கிடையாது என்று தொிவித்திருந்தாா்.

இந்நிலையில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனு ஒன்றில், பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள நபா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு அமலில் உள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் அரசாணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையின் முதல் கட்டத்திலேயே நான்கு போ் மட்டும் தான் குற்றம் செய்துள்ளனா். வேறு நபா்களுக்கு தொடா்பு இல்லை என்று கூறிய காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளியிட்டதற்கு அரசுக்கு கண்டனம் தொிவித்தனா். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மேலும் காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன் மீது துறைரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி