ஆப்நகரம்

பொள்ளாச்சி விவகாரம்: மணிவண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி

பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Samayam Tamil 28 Mar 2019, 5:46 pm
பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil salnal


பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் ஒருவர் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாய் இருந்தார்.


பின்னர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசையும் கைது செய்தனர். இதனிடையே புகார்தாரரின் அண்ணன் மீது பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் செந்தில் 33, பாபு 26, வசந்தகுமார் 20, மணி என்ற மணிவண்ணன், பார் நாகராஜ், ஆகியோர் மீது பொள்ளாச்சி போலீசார் 294 b, 323, 324 ,506 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மணி என்ற மணிவண்ணன் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாதுக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய மணிவண்ணனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நகராஜ் இதற்கு முன்பாக உத்தரவிட்டார்.

இந்நிலையில் மணிகண்டனின் ஜாமீன் மனு இன்று விசரணைக்கு வந்தது.இதை விசாரித்த நீதிபதிகள் மணிவண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி