ஆப்நகரம்

பாலியல் வழக்கு: திருப்பூருக்கு திருப்பிவிடப்படும் பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கால் பொள்ளாச்சி ஜெயராமன் தொகுதி மாறி போட்டியிட முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

Samayam Tamil 16 Jan 2021, 9:41 am
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியேவந்தது பொள்ளாச்சி கொடூரம். இளம் பெண்களை மிரட்டி பாலியல் கொடுமை செய்த கும்பல் போலீஸில் சிக்கியது. அந்த குற்றச் சம்பவம் குறித்து தெரிய வந்தபின் தமிழகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. ஆளும் அதிமுகவின் நிர்வாகிகள் அதிகார துணையுடன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
Samayam Tamil pollachi sexual assault case jayaraman constituency is being consulted to change to tirupur
பாலியல் வழக்கு: திருப்பூருக்கு திருப்பிவிடப்படும் பொள்ளாச்சி ஜெயராமன்


அதிமுகவுக்கு விழுந்த அடி

சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பெயரும் இதில் அடிபட்டது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் பொள்ளாச்சி விவகாரத்தை திமுக கையிலெடுத்தது. அதில் வெற்றியும் கண்டது. அதிமுக வலுவான வாக்கு வங்கி வைத்திருப்பதாக கூறப்படும் கொங்கு மண்டலத்திலும் தோல்வியே பரிசாக கிடைத்தது.

அது நாங்க இல்ல!

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் அந்த வழக்கில் கைதுப் படலம் தொடங்கியுள்ளது. அதிமுக மாணவரணி நிர்வாகி அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் மீண்டும் இந்த விவகாரம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமன் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக எனது மகன் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டது உறுதியானால் ஐம்பது ஆண்டு கால அரசியல் வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதாக கூறினார்.

யார் இந்த அருளானந்தம்?

தன் மீது குற்றச்சாட்டு வைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை நிரூபிக்க முடியாவிட்டால் தலைவர் பதவியிலிருந்து விலகுவாரா என்றும் கேள்வி எழுப்பினார். இருப்பினும் கைது செய்யப்பட்ட அருளானந்தம் பொள்ளாச்சி ஜெயராமனுடனும், அமைச்சருடனும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயராமனுக்கு நெருக்கடி

பொள்ளாச்சி ஜெயராமன் 2001, 2006 இரு சட்டமன்றத் தேர்தலிலும் பொள்ளாச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டு அவருக்கு உடுமலைப் பேட்டை தொகுதி கொடுக்கப்பட்டது. அங்கும் வெற்றி பெற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். நான்கு முறை தொடர்ந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொள்ளச்சி ஜெயராமனுக்கு இந்த முறை நெருக்கடி உருவாகியுள்ளது.

திருப்பூருக்கு போனால் தப்பிக்கலாமா?

பொள்ளாச்சி பாலியல் வழக்கால் ஜெயராமன் அந்த தொகுதியில் நின்றால் அது மட்டுமல்லாமல் அதன் பக்கத்து தொகுதி வரை அதிமுக எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும். இதனால் பொள்ளாச்சி ஜெயராமனை வேறு தொகுதிகளில் போட்டியிடவைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல்லடம் அல்லது திருப்பூர் வடக்கு தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் நிறுத்தப்படலாம் என்கின்றனர். அதனாலே அவருக்கு திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயராமனை ஃபாலோ பண்ணும் பொள்ளாச்சி

போயஸ் கார்டனில் பால் காய்ச்சும் சசிகலா? வெளிவராத தகவல்கள்!

திருப்பூர் வடக்கு தொகுதியிலேயே பொள்ளாச்சி ஜெயராமன் களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறுகின்றனர். திமுக தரப்பிலோ, “அவரது பெயரோடு பொள்ளாச்சி அவரை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்கிறது. அவர் எங்கு சென்றாலும் மக்களிடமிருந்து தப்ப முடியாது” என்று கூறுகின்றனர்.

அடுத்த செய்தி