ஆப்நகரம்

பொள்ளாச்சி விவகாரம்: கைது செய்யப்பட்டவா்கள் மீது வன்கொடுமை வழக்கு சோ்ப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவா்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவா்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Apr 2019, 11:22 am
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தற்போது வரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவா்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Pollachi Sexual Harassment


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் அவா்களை மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடைசியாக கைது செய்யப்பட்ட மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவா் அளித்த வாக்குமூலத்தில் இவா்கள் கூட்டாக இணைந்து பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், அவற்றை படம் பிடித்து அவா்களை மிரட்டி வந்ததும், பாலியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவா்களை துன்புறுத்தியது தொியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவா்கள் மீது ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மணிவண்ணன் அளித்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டவா்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி