ஆப்நகரம்

ஒரு வீடியோ ரூ.40,000க்கு வாங்கப்பட்டதாம்; பொள்ளாச்சி விவகாரத்தில் பரபரப்பு தகவல்!

தமிழகத்தையே உலுக்கி உள்ள பொள்ளாச்சி விவகாரத்தில், வீடியோ ஒன்று ரூ.40,000க்கு வாங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Mar 2019, 2:12 pm
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அரசியல் கட்சியினர் மாறி, மாறி புகார் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதலில் தாங்கள் தாக்கப்பட்டதாக போலீஸில் திருநாவுக்கரசு தரப்பு புகார் அளித்துள்ளது. அதேசமயம் பெண்ணின் தரப்பு போலீஸூக்கு பயந்து ஒதுங்கியுள்ளது. இவர்கள் வேறொருவர் உதவியுடன் தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் ஜெயராமனை அணுகியுள்ளனர்.
Samayam Tamil Rape Case


அவர், ஏன் நீங்கள் புகார் தரவில்லை. அவர்கள் தானே ஓடி ஒளிந்திருக்க வேண்டும். நீங்கள் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டு, போய் புகார் செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகே போலீசில் புகார் அளித்து, 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருநாவுக்கரசிற்கு, ஒரு கட்சியின் பிரமுகர் ஆலோசனை கூறியுள்ளார்.

மேலும் இவரை அக்கட்சியின் ஐடி விங்க் நன்றாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஒரு பிரபலமான நபர், குறிப்பிட்ட பெண்ணின் கதறல் வீடியோவை ரூ.40,000க்கு வாங்கியுள்ளார். 40 நிமிடங்கள் ஓடும் வீடியோவை 4 நிமிடங்களாக சுருக்கி, டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்த பெண் தரப்பு கூறுகையில், முதலில் சிக்கியது 4 வீடியோக்கள் தான். அதிலிருந்த சில பெண்களை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது. இதற்கிடையில் நாங்கள் 4 பெண்கள் புகார் தர திட்டமிட்டிருந்தோம். போலீஸூம் தங்கள் தரப்பில் 4 பெண்களை புகார் தர தயார்படுத்தி இருந்தனர்.

அதற்குள் எதிர்பாராத விதமான வீடியோ வெளியாகி அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. இதனால் புகார் தர முன்வந்த பெண்கள் எல்லாம் பயந்து ஒதுங்கிவிட்டனர். எனவே நடந்தவற்றை பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து குரல் பதிவு செய்து, விரைவில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி