ஆப்நகரம்

சிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்!

சிலை கடத்தல் தொடர்பான அணைத்து ஆவணங்களையும் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பொன் மாணிக்கவேல் அதனை ஒப்படைத்துள்ளார்

Samayam Tamil 15 Dec 2019, 5:02 pm
சென்னை: சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார்.
Samayam Tamil பொன் மாணிக்கவேல்
பொன் மாணிக்கவேல்


சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. அவரது பதவிக்காலம் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, அதனை மேலும் ஓர் ஆண்டுக்கு உயர் நீதிமன்றம் நீட்டித்தது.

அதன்படி, அவரது பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அவர் ஒப்படைக்கவில்லை.

பொன் மாணிக்க வேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஒரு வாரத்துக்குள் அணைத்து ஆவணங்களையும் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிலை கடத்தல் ஆவணங்களை பொன். மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும்.! - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அப்போதும், அவர் ஆவணங்களை ஒப்படைக்காததால், பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் கூடுதல் டிஜிபி அபய்குமாரி சிங்கிடம் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார்.

அடுத்த செய்தி