ஆப்நகரம்

சிலைக்கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கலாம் - உச்சநீதிமன்றம்

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2019, 11:19 am
சிலைக்கடத்தல் தொடா்பான வழக்குகளை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடரலாம் என்று தொிவித்துள்ள உச்சநீதிமன்றம், விசாரணையின் போது கைது செய்யும் அதிகாரம் பொன்.மாணிக்கவேலுக்கு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தொிவித்துள்ளது.
Samayam Tamil pon Manikavel.


சிலைக்கடத்தல் தடுப்பு தொடா்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் சிலைக்கடத்தல் தொடா்பான வழக்குகளை விசாரணை செய்து வந்த ஐஜி பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்ற பின்னரும் அவா் மேலும் ஓராண்டு சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அரசாணையை ரத்து செய்ததை எதிா்த்தும், பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை ரத்து செய்யக் கோாியும் தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், பொன்.மாணிக்கவேல் தொடா்ந்து இந்த வழக்கில் செயல்படலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையின் போது பொன்.மாணிக்கவேல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட அதிகாரம் இல்லை என்று உத்தரவிட்டனா்.

புதிய அதிகாாியான ஐஜி அபய்குமாா் சிங் தான் கைது நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி