ஆப்நகரம்

கழகங்கள் நிலை இழந்து வருகின்றன: பொன்னார்

தமிழகத்தில் கழகங்கள் தங்கள் நிலையை இழந்து வருகின்றன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Samayam Tamil 6 Jan 2018, 5:37 pm
தமிழகத்தில் கழகங்கள் தங்கள் நிலையை இழந்து வருகின்றன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Samayam Tamil pon radhakrishanan defames dmk and admk
கழகங்கள் நிலை இழந்து வருகின்றன: பொன்னார்


வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்னார், "தமிழகத்தில் கழகங்கள் தங்கள் நிலையை இழந்து வருகின்றன. அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. திமுக கடைசி அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது." என்று கூறினார்.

"ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் புதிய மாற்றமாக இருக்கும என்று மக்கள் நினைக்கலாம். ஆனால், பாஜகவை பொறுத்தவரை கட்சியை வலுப்படுத்தி தமிழகத்தின் மாற்று சக்தியாக கொண்டு வர முயற்சிக்கிறோம்." என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம், அதிமுக அழிந்துவிட்டது, திமுக அழிந்து கொண்டுள்ளது என்று பொன்னார் கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி