ஆப்நகரம்

பெண்களை இழிவுபடுத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாது - எஸ்வி சேகருக்கு எதிரான பொன் ராதா

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என எஸ்வி சேகர், கருத்துக்கு பொன் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்

Samayam Tamil 20 Apr 2018, 8:55 pm
சென்னை : பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என எஸ்வி சேகர், கருத்துக்கு பொன் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்
Samayam Tamil pon-radhakrishnan


பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுகின்றன என்ற திருமலை என்பவரின் கருத்தை பதிவிட்ட பாஜகவின் எஸ்வி சேகர், அவரின் கருத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பதிவை நீக்கினார். தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன், “யாராக இருந்தாலும் பெண்களை தவறாக, இழிவுபடுத்தும் வண்ணம் பேசுவது ஏற்றுக் கொள்ளமுடியாது.” என தெரிவித்துள்ளார்.
மேலும் நிர்மலா தேவி வழக்கில் தேவையில்லாமல் ஆளுநரை குற்றவாளியாக்க சசி நடக்கிறது. என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி