ஆப்நகரம்

மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக 30 தொகுதிகளில் வெல்லுமாம்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

மக்களவை தேர்தல் இன்று நடைபெற்றாலும் பாஜக 30 தொகுதிகளில் வெல்லும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Nov 2018, 12:40 pm
மக்களவை தேர்தல் இன்று நடைபெற்றாலும்பாஜக 30 தொகுதிகளில் வெல்லும் என்றுமத்திய இணை அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil samdbaksjda


மத்திய இணை அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறிதாவது ‘பாஜகவின் வலிமை தமிழகத்தில் குறையவே இல்லை. தற்போது மக்களவை தேர்தல்நடந்தாலும்30 தொகுதிகளைபாஜக கைப்பற்றும். ஆனால் எங்கள் இலக்கு 40 தொகுதிகள். அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை.

ஆனால், நட்பு ரீதியாக பேச்சு நடத்தி வருகிறோம். 2014 மக்களவை தேர்தலில் அமைத்ததை விட வலிமையான கூட்டணியை அமைப்போம். தேர்தல் கூட்டணிகள் அமைக்க இன்னும் காலங்கள் உள்ளது. இருப்பினும், எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லாத கட்சிகளே கிடையாது.

மேலும் திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு ‘அவர்களுடன் கூட்டணிவைக்க வாய்பில்லை. நாங்கள் திமுகவை கூட்டணிக்கு அழைக்கிறோம் என்ற தம்பிதுரை கருத்து ஆதரவில்லாதகுழந்தையின் குரல்போல் இருக்கிறது‘’ என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி