ஆப்நகரம்

திருவாரூர் தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசு உண்டு - தமிழக அரசு!

சென்னை: பொங்கல் பரிசு திருவாரூர் தொகுதி மக்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

Samayam Tamil 7 Jan 2019, 9:30 am
தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அரிசு, கரும்பு, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கும்.
Samayam Tamil TN Govt


இந்நிலையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அரசுக்கு ரூ.17 ஆயிரத்து 500 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அங்கு தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. எனவே அந்த தொகுதியை தவிர பிற தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இன்று காலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் விதிமுறைகள் உடனடியாக திரும்ப பெறப்பட்டுள்ளது.

எனவே திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி