ஆப்நகரம்

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு வசூல் இதுவரை எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி கணக்கின்படி, சுமார் 8.26 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது.

Samayam Tamil 9 Jan 2020, 5:14 pm
பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இதுவரை 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil bus reservation collection


கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவைத் தொடக்கி வைத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளா்களிடம் பேசினார்.

அப்போது “பொங்கலுக்கு சொந்த ஊா்களுக்குச் செல்ல பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜன.10 முதல் 14-ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஊருக்குப் போக சிறப்பு பேருந்துகள் ரெடி... பொங்கலுக்கு பண்டிகை கால கூடுதல் பேருந்துகள் எத்தனை தெரியுமா?

இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சானடோரியம் ஆகிய பேருந்து நிலையங்களில் தலா 1 மையமும் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், இதுவரை முன்பதிவு வாயிலாக சுமார் 6.84 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி கணக்கின்படி, சுமார் 8.26 கோடி ரூபாய் வசூலாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதியே 6.84 கோடி ரூபாய் வசூலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி