ஆப்நகரம்

பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்ப, இதோ வரிசை கட்டி கிளம்பும் சிறப்பு ரயில்கள்!

பொங்கலுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

TNN 4 Jan 2018, 12:21 am
சென்னை: பொங்கலுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
Samayam Tamil pongal special trains announced by southern railway
பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்ப, இதோ வரிசை கட்டி கிளம்பும் சிறப்பு ரயில்கள்!


வரும் 14ஆம் தேதி, தைப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என விடுமுறை நாட்கள் வரிசைக் கட்டி வருகின்றன.

இதையடுத்து தமிழர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி,

சென்னை எழும்பூர் - நெல்லை

* சுவிதா எக்ஸ்பிரஸ் - ஜனவரி 5, 11, 12, 13, 19 மற்றும் 25

* புறப்படும் நேரம்: 21.50 மணி

நெல்லை - சென்னை எழும்பூர்

* சுவிதா எக்ஸ்பிரஸ் - ஜனவரி 7, 28

* புறப்படும் நேரம்: 15 மணி

இதுதொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மேலும் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Pongal Special trains announced by Southern Railway.

அடுத்த செய்தி