ஆப்நகரம்

பொங்கல் முடிந்து வரும் மக்கள்; சென்னையில் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறையில் சொந்த ஊர் சென்ற மக்கள், இன்று வேலைநாளில் மொத்தமாக சென்னை திரும்பியதால், பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2018, 9:31 am
பொங்கல் விடுமுறையில் சொந்த ஊர் சென்ற மக்கள், இன்று வேலைநாளில் மொத்தமாக சென்னை திரும்பியதால், பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil pongal traffic jam in chennai
பொங்கல் முடிந்து வரும் மக்கள்; சென்னையில் போக்குவரத்து நெரிசல்


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டதுக்காக சொந்த ஊர் சென்ற மக்கள், விடுமுறை முடிந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.

குறிப்பாக தென்மாவட்ட மக்களே சென்னையில் அதிகம் இருப்பதால், திருநெல்வேல, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஒட்டுமொத்த மக்களும் சென்னை திரும்புவதால், சென்னையில், காலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

சென்னை கோயம்பேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகிளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பியது. பல பயணிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, ஆட்டோக்களில் தெருக்கள் வழியாக சென்றனர்.

அடுத்த செய்தி