ஆப்நகரம்

பூந்தமல்லி : அரசு பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி

பூந்தமல்லி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி

TNN 31 Oct 2017, 10:23 am
பூந்தமல்லி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி.
Samayam Tamil poonamallee government accident 3 died
பூந்தமல்லி : அரசு பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று காலை அரசு பேருந்து புறப்பட்டு சென்றது.இந்த பேருந்தில் 40–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தை அடுத்த பழஞ்சூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விப்பத்தால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. விபத்தில் பள்ளி ஆசிரியை வசந்தி என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தற்போது இவர் தீவிரசிகிச்சை பெற்று வருகிறார்.

டிரைவர், கண்டக்டர் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இது பிரதான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் உண்டானது .

poonamallee government accident 3 died

அடுத்த செய்தி