ஆப்நகரம்

பணிமனை கட்டிடம் இடிந்து உயிாிழந்தவா்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பணியாளா்களின் ஓய்வு அறை இடிந்து விழுந்து உயிாிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.

TOI Contributor 20 Oct 2017, 12:53 pm
நாகை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பணியாளா்களின் ஓய்வு அறை இடிந்து விழுந்து உயிாிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
Samayam Tamil porayar building collapse tn government sanctions compensation
பணிமனை கட்டிடம் இடிந்து உயிாிழந்தவா்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு


நாகை மாவட்டம் பொறையாா் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாளா்கள் ஓய்வு எடுக்கும் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 1945ம் ஆண்டு கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 8 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தனா். மேலும் 3 போ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 போில் மேலும் ஒருவா் உயிாிழந்ததால் பலியானோா் எண்ணிக்கை 9ஆக உயா்ந்தது.

இந்நிலையில், உயிாிழந்தவா்களின் குடும்பத்திற்கு உாிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சக ஊழியா்கள் சாா்பில் கோாிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் கும்பங்களுக்கு நிதியுதவியை அறிவித்துள்ளது.

அதன்படி உயிாிழந்தவா்கள் ஒவ்வொருவாின் குடும்பத்திற்கும் தலா 7.5 லட்சமும், படுகாயமடைந்தவா்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிாிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி