ஆப்நகரம்

மதுரை விமான நிலைய சுற்றுச்சுவரில் பெரும் சேதம்

கனமழையின் காரணமாக மதுரை விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் பெரும் பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

TNN 13 Aug 2017, 9:19 pm
மதுரை: கனமழையின் காரணமாக மதுரை விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் பெரும் பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
Samayam Tamil portion of madurai airport compound wall collapses
மதுரை விமான நிலைய சுற்றுச்சுவரில் பெரும் சேதம்


மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மதுரை விமான நிலையத்தின் உள்பகுதியில் தேங்கும் தண்ணீர் வெளியேற முடியாமல் உள்ளது. இதனால், மதுரை - தூத்துக்குடி பிரதான சாலை பகுதியில் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் 50 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் புதிய சுற்றுசுவர் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான நிலைய இயக்குநர் ராவ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி