ஆப்நகரம்

கோவிட்-19ல் இருந்து மீள்கிறதா தமிழகம்?- பாதிப்பின் சமீபத்திய நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கிறது, மீண்டு வந்தவர்கள் எத்தனை பேர் என்று இங்கே அறிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 19 Apr 2020, 8:38 am
தமிழகத்தில் ஒருபுறம் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 1,372 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 49 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 47 பேர் டெல்லி தப்லிகி ஜமாஅத் நிகழ்விற்கு சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் கோவையைச் சேர்ந்த செவிலியர் ஆவார். மற்றொரு வேறு மாநிலங்களுக்கு சென்று திரும்பியவர்.
Samayam Tamil தமிழகத்தில் கொரோனா


வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் 365 பேர் ஆவர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கில் ஒரு பங்கு நபர்கள் குணமடைந்து இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

"முதல்வரே கெட்டுபோகாதீங்க, சொல்றத கேளுங்க" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

பரிசோதனைகளின் அளவை அதிகரித்துள்ளோம். ஒரே நாளில் 5,363 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 49 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் 21 ஆய்வகங்கள் உடன் மொத்த 31 வைரஸ் பரிசோதனை ஆய்வகங்கள் இருக்கின்றன. அரசு ஆய்வகங்களில் செய்யப்படும் பரிசோதனைகள் முற்றிலும் இலவசம்.

இரண்டு ஆய்வகங்களில் மட்டும் ஒரே நாளில் 1,000 பேருக்கு பரிசோதனை செய்யக்கூடிய அளவு வசதி இருக்கிறது. மேலும் இரண்டு ஆய்வகங்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும். நேற்று முதல் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்டிங் கிட்ஸ் மூலம் ஹாட்ஸ்பாட்களில் இருப்பவர்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஏற்படும் பலி எண்ணிக்கையை 1.1 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க மருத்துவர்கள் அளப்பறிய பணியாற்றி உள்ளனர். 95 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படுவது இல்லை. உடலில் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திடீரென உடல்நிலை மோசமாகும் சூழல் ஏற்படுகிறது. வைரஸ் தொற்றால் இறக்கும் நபர்களின் மருத்துவ அறிக்கைகளைக் கொண்டு வல்லுநர்கள் உதவியுடன் சிகிச்சை முறைகளை மேம்படுத்த தொடர்ச்சியாக செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

ஊர் சுற்றுவோரை பிடிக்க வரும் புதிய ஆப்!

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் 35,036 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி அரசு ஏற்படுத்தியுள்ள இடங்களில் 34 பேரும், மருத்துவமனைகளில் 1,884 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அடுத்த செய்தி