ஆப்நகரம்

முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலையே: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலையே என அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Mar 2017, 5:41 pm
புதிதில்லி: தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலையே என அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil post mortem report says muthukrishnan death is suicide
முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலையே: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்


தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான முத்துக்கிருஷ்ணன், அப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ரோஹித் வெமுலா விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது.

தலித் மாணவரான முத்துக்கிருஷ்ணன், மிகவும் துடிப்பான மாணவர் என்றும், அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. எனவே, இது கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்தது. சமத்துவம் மறுக்கப்படும் போது, அனைத்தும் மறுக்கப்படுகிறது என்ற அவரது முகநூல் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெருமைவாய்ந்த மத்திய பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்களின் நிலை குறித்து எடுத்துரைப்பதாக அமைந்த இந்த பதிவு, நாடு முழுவதும் பரவலான விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

முத்துக்கிருஷ்ணண் மரணம் குறித்து தில்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், முத்துக்கிருஷ்ணனின் உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 பேர் இந்த பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டனர். அதில், அவரது மரணம் தற்கொலையே என கூறப்பட்டுள்ளது.

முத்துக்கிருஷ்ணனின் உடலில் எவ்வித காயங்களும் இல்லை. எந்த சூழலில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். உடற்கூறாய்வின் போது, அவரது தந்தை தரப்பு மருத்துவரும் உடனிருந்தார். உடற்கூறாய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post mortem report says Muthukrishnan death is suicide

அடுத்த செய்தி