ஆப்நகரம்

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் 3 பேர் உடல் கருகி பலி

குடும்பத்தினருடன் தன் வீட்டில் உறங்கி கொண்டிருக்கும்போது படுக்கை அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்தில் உறங்கிக்கொண்டிருந்த மூவரும் உடல் கருகி இறந்துள்ளனர்.

Samayam Tamil 15 May 2019, 11:55 am
திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கம் சுப்பராயன் தெரு பகுதியில் வசித்து வருபவர் ராஜூ. 60 வயதாகும் இவர் வெல்டிங் ஒர்க் ஷாப் கடை நடத்திவந்துள்ளார்.
Samayam Tamil index


செவ்வாய் இரவு இவர் குடும்பத்தினருடன் தன் வீட்டில் உறங்கி கொண்டிருக்கும்போது படுக்கை அறையில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் உறங்கிக்கொண்டிருந்த ராஜூ, அவரது மனைவி கலா மற்றும் அவரது மகன் கௌதம் (27) ஆகிய மூவரும் உடல் கருகி இறந்துள்ளனர்.

இதைப் பற்றித் தகவல் தெரிந்துகொண்டு வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைப்பதற்குள் மூவரும் தீயில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். வீட்டின் மற்றொரு அறையில் இருந்த ராஜூவின் மற்றொரு மகன் கோவர்த்தனனும் அவரது மனைவியும் உயிர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடலை திண்டிவனம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துகின்றனர். வருகின்றனர்.

அடுத்த செய்தி