ஆப்நகரம்

தமிழில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.!

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 25 Nov 2017, 8:58 am
தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil preference for whose learned in tamil in government jobs chennai high court
தமிழில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.!


கடந்த 2010-ம் ஆண்டு, தமிழக அரசு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த அரசாணையை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை. இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், முதுநிலை வரை தமிழில் படித்த தனக்கு தமிழக அரசு உரிய வேலைவாய்ப்பு வழங்கவில்லை. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை முறையாக பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2010-ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அதன்படி, தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் கட்டாயம் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி