ஆப்நகரம்

மதுரையில் கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் மரணம்!

மதுரை: மதுரையில் கர்ப்பிணி பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Nov 2018, 8:30 pm
மதுரை கீரைத்துரைப்பகுதியைச் சேந்தவர் முத்துப்பேச்சி, 23 வயது. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன், ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் மகன் ஒருவன் உள்ளார்.
Samayam Tamil 5


இந்நிலையில் இன்று அக்கம்பக்கத்தினர், முத்துப்பேச்சியை காணவில்லையே என அவர் வீட்டுக்கு சென்ற போது அங்கு அவர் இறந்து கிடந்தார். இதையடுத்து அவர்கள் உடனடியாக, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக அங்குவந்த போலீசார், அவர் உடலை கைப்பற்றினர். ஏழுமாத கர்ப்பமாக இருந்த முத்துப்பேச்சி, ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாகவும், அக்கம்பக்கத்தினர் பார்ப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாக தான் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்தனர்.
இதையடுத்து கீரைத்துரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துப்பேச்சியின் கணவர் ராஜ்குமார், அவரின் மகன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி