ஆப்நகரம்

Gaja Cyclone: தமிழக முதல்வருக்கு மக்களை சந்திக்க திராணி இருக்கா? பிரேமலதா கேள்வி!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி சரமாரியாக கேள்வியெழுப்பி உள்ளார்.

Samayam Tamil 28 Nov 2018, 4:16 pm
ஹெலிகாப்டரில் சுற்றும் தமிழக முதல்வருக்கு, மக்களை சந்திக்க திராணி இருக்கா என பிரேமலதா விஜகாந்த் கேள்வியெழுப்பி உள்ளார்.
Samayam Tamil Gaja Cyclone: தமிழக முதல்வருக்கு மக்களை சந்திக்க திராணி இருக்கா? பிரேமலதா கேள்வி!
Gaja Cyclone: தமிழக முதல்வருக்கு மக்களை சந்திக்க திராணி இருக்கா? பிரேமலதா கேள்வி!


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் தேமுதிக சந்திக்க தயாராக இருக்கிறது. மக்கள் இந்த முறை ஒரு மாற்றத்தை கொண்டு வருவது உறுதி. இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திமுகவு அதிமுக கட்சிகள் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பார்க்கமுடியாமல், ஊருக்குள் போகமுடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்க திராணி இல்லாததால் ஹெலிகாப்டரில் சுற்றிவிட்டு சந்திக்க முடியவில்லை என்று போய் விட்டார்.

கடந்த 10 நாட்களாக மின்சாரம் இல்லாமல் சாலை வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். மக்களுடைய பிரச்சினை கையிலெடுத்து தீர்க்கக்கூடிய அரசு தான் இனிமேல் வரவேண்டும். தேமுதிக வாக்குவங்கி கூடிக்கொண்டே வருகிறது. வரப்போகும் தேர்தலில் விசுவரூபம் எடுத்து வெற்றி பெறுவோம்.

மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய காங்கிரஸ், பாஜக கட்சி கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் கோடி இழப்பீடு அறிவித்துவிட்டு எதற்காக இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசிடமிருந்து நிதியை வாங்கி இவர் கொடுத்த போல் கொடுத்துவிட்டு மீதி தொகையை இவர்கள் சுருட்டி விடலாம் என நினைக்கிறார்களா? இனிமேல் அறிவிப்பு அரசியல் இங்கு எடுபடாது.

நாடும் மக்களும் முன்னேறும் வகையில் அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. இனிமேல் மக்களுக்கான பணிகள் என்ன என்பதை ஆராய்ந்து செய்யக்கூடிய நல்ல அரசு, தைரியமான நல்ல முதல்வர் நல்லாட்சி வேண்டும் என்பது மக்கள் கருத்தாக இருக்கிறது

அடுத்த செய்தி