ஆப்நகரம்

விஜய பிராபகரனுக்கு கட்சி பொறுப்பு: விஜயகாந்த் எடுக்கும் முடிவு!

ஆளுநரும் முதலமைச்சரும் அவரவர் வேலைகளை பார்த்தாலே போதும் இங்கு சர்ச்சைக்கு வேலை இருக்காது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Jun 2022, 11:25 am
விஜய பிரபாகரனிடம் தேமுதிகவின் கட்சி பொறுப்பை ஒப்படைப்பது குறித்து விஜயகாந்த் முடிவெடுப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
Samayam Tamil vijayakanth family


சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “விஜயகாந்த் நலமாக உள்ளார் . அவர் மாதம்தோறும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்லுவது வழக்கம் தான்.

தேமுதிகவின் உட்கட்சி தேர்தல் இன்னும் ஒரு மாத காலத்தில் நடைபெறவிருக்கிறது. உட்கட்சி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நளினி , ரவிச்சந்திரன் மனு தள்ளுபடி: விடுதலை செய்ய மறுப்பு!ஆகஸ்ட் 25 இல் விஜயகாந்த் அவர்களின் 70வது பிறந்த நாளும் செப்டம்பர் 14 கட்சியின் 18 ஆம் ஆண்டு தொடக்க விழாவும் வர இருக்கிறது. அதை எவ்வாறு தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பாக கொண்டாடலாம் என்று இந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தேமுதிகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் முனைப்போடு இருக்கிறோம். அதற்காக ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதிமுக செய்த தவறுகளால்தான் இன்று அவர்கள் ஆட்சியை இழந்து வருந்துகிறார்கள். நாங்கள் சொன்னதை அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் ஆட்சியில் இருந்திருப்பார்கள். தேமுதிக தான் உண்மையான எதிர்க்கட்சியாக தற்போது செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சினைக்கும் முதல் குரலாக தேமுதிக கொடுத்தது , மக்களுக்காக எங்களுடைய குரலை தைரியமாக கொடுத்திருக்கிறோம்.

இந்த அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் அதை நிரூபிக்க வேண்டும்.
போக்குவரத்து துறையில் அடுத்து நடக்க உள்ள மாற்றம்: அமைச்சர் ஆலோசனை!
மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பை வழங்குவது குறித்து தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார். ஆன்மீகவாதி அரசியல் பேசக்கூடாது என்றும் அரசியல்வாதி ஆன்மீகம் பேசக்கூடாது. அவரவர் வேலையை அவரவர் செய்தாலே இந்த சர்ச்சைக்கு வேலை இருக்காது” என்று கூறினார்.

அடுத்த செய்தி