ஆப்நகரம்

ஈரோடு தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் மாதிரி இருக்கிறாரா? லேடி கேப்டன் இப்படியா சொன்னார்?

தேமுதிகவை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 10 Feb 2023, 1:44 pm
தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
Samayam Tamil erode dmdk


திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா அல்லது பணநாயகமா அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
பெரம்பூர் நகைக் கடை கொள்ளை: 9 கிலோ தங்கம் அபேஸ் - ஷட்டரை துளையிட்டு துணிகரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் நன்கு அறிமுகமானவர். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். எனவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

மேலும் அவர், “எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. மக்களது வரிப்பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளாமல் நிலையில் இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

எடப்பாடியின் தேர்தல் பிளான்: களத்தில் இறங்கிய வலது கை - இது செம ஸ்கெட்ச்!

எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி