ஆப்நகரம்

அதிமுக எம்பி-க்களை சந்திக்க குடியரசுத் தலைவர் நேரம் தரவில்லை

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்ட நிலையில், அவர்களை சந்திக்க அவர் நேரம் தரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 9 Feb 2017, 1:13 pm
புதுதில்லி: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்ட நிலையில், அவர்களை சந்திக்க அவர் நேரம் தரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil president did not give time to meet admk mps
அதிமுக எம்பி-க்களை சந்திக்க குடியரசுத் தலைவர் நேரம் தரவில்லை


அதிமுக.,வுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால், ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றும் சசிகலா அணியினரின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சசிகலா முதல்வர் பொறுப்பேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருவதால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து, இதுபற்றி முறையிட, அதிமுக மேலிடம் முடிவு செய்தது. இதன்படி, அதிமுக எம்பி.,க்கள் தில்லி சென்றனர். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், இன்று மாலை அவர்கள், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தலைமையில் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தனர்.

குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்கும்பட்சத்தில் அவரை சந்தித்து, தமிழக அரசியலின் உண்மை விவரம், அதிமுக.,வின் தற்போதைய நிலை, சசிகலாவின் செயல்பாடுகள் போன்றவை பற்றி விரிவாக பேசுவோம் என அதிமுக எம்பி-க்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க குடியரசுத் தலைவர் நேரம் தரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக-வுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
President did not gave time to meet ADMK MP's

அடுத்த செய்தி