ஆப்நகரம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி நியமனம்

சஞ்ஜீப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Samayam Tamil 31 Dec 2020, 10:07 pm
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹீல் ரமணி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, பொறுப்பு நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை குடியரசு தலைவர் நியமித்தார். அதன் பின்னர் காலியாக இருந்த தலைமை நீதிபதி பதவிக்கு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி. சாஹியை நியமிக்கஉச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்தது.
Samayam Tamil சஞ்ஜீப் பானர்ஜி
சஞ்ஜீப் பானர்ஜி


அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அண்மையில் பரிந்துரை செய்தது.

வழக்கமான நடைமுறையின்படி, இந்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனடிப்படையில், தலைமை நீதிபதியை தமிழக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்ஜீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொங்கல் பரிசு கிடையாது; தமிழக அரசு சொன்ன அதிர்ச்சி செய்தி!

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய சஞ்ஜீப் பானர்ஜி, 1990 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக பதிவு பெற்று கொல்கத்தா நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வந்தார். 2006ஆம் ஆண்டில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி