ஆப்நகரம்

நாளை அல்லது நாளை மறுநாள் வாடி வாசலில் காளைகள் துள்ளி பாயும்: முதல்வர் பன்னீர் செல்வம் நம்பிக்கை

President will sign the ordinance tomorrow; after that Governor will promulgate the ordinance: TN CM Panner SelvamJallikattu, SaveJallikattu, We Save Our Jallikattu, Jallikattuprotest, JallikattuSlogans, Panneer Selvam, Special ordinance for Jallikattu, ஜல்லிக்கட்டுநாளை அல்லது நாளை மறுநாள் வாடி வாசலில் காளைகள் துள்ளி பாயும்: முதல்வர் பன்னீர் செல்வம் நம்பிக்கைடெல்லி சென்று ஜல்லிகட்டு நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் மோடியை சந்தித்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்தார். அங்கேயே தங்கியிருந்து சட்ட வல்லுனர்களையும் சந்தித்து பேசினார்.

TOI Contributor 20 Jan 2017, 1:39 pm
டெல்லி சென்று ஜல்லிகட்டு நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் மோடியை சந்தித்து தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்தார். அங்கேயே தங்கியிருந்து சட்ட வல்லுனர்களையும் சந்தித்து பேசினார்.
Samayam Tamil president will sign the ordinance tomorrow after that governor will promulgate the ordinance tn cm panner selvam
நாளை அல்லது நாளை மறுநாள் வாடி வாசலில் காளைகள் துள்ளி பாயும்: முதல்வர் பன்னீர் செல்வம் நம்பிக்கை


இதையடுத்து, இன்று சென்னை திரும்பினார் பன்னீர் செல்வம். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பன்னீர் செல்வம் கூறியதாவது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. அங்கேயே நான் ஒரு நாள் தங்கியிருந்து சட்ட வல்லுநர்களை ஆலோசித்து, அவசர சட்ட திருத்தத்தை கொண்டு வரவும், அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கு அனுப்பப்பட்டு, இன்று மாலை இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளியூரில் இருக்கும் அவர் இன்று மாலை தான் டெல்லி செல்கிறார்.

நாளை அவர் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பார். நாளை அல்லது மறுநாள் அவசர சட்டம் அமல் என்ற மகிழ்ச்சி செய்தி வரும். என் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தி வைக்கப்படும். மாணவர்களும், இளைஞர்களும் வாடி வாசலில் காளைகள் துள்ளி குதித்து வருவதைக் காணலாம். எதுவும் நம்பிக்கை அடிப்படையில்தான் செய்கிறோம். எந்தத் தடை வந்தாலும் சட்டத்தின் மூலம் நீக்க தமிழகம் அனைத்து நடவடிகைகளையும் எடுக்கும்.

இவ்வாறு முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.

அடுத்த செய்தி