ஆப்நகரம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான திருப்பங்களுடன் அதிமுக!

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பாடுபட்டு வளர்த்த அதிமுக கட்சியானது ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்கள் பலவற்றை கண்டு வருகிறது.

TNN 22 Jun 2017, 1:06 pm
சென்னை : எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பாடுபட்டு வளர்த்த அதிமுக கட்சியானது ஒவ்வொரு நாளும் அதிரடி திருப்பங்கள் பலவற்றை கண்டு வருகிறது.
Samayam Tamil presidential elections aiadmk panneerselvam faction extends support to ram nath kovind
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான திருப்பங்களுடன் அதிமுக!


ஜெயலிலதா இறந்த பிறகு அதிமுக கட்சியில் குளறுபடிகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம். இரண்டு அணி, மூன்று அணி என்று கட்சி பிரிந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அதிரடி அரங்கேறி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஆளும் எடப்பாடி தலைமையிலான அரசு மத்தியில் ஆளும் பிஜேபி நிறுத்தியுள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் ராம் நாத் கோவிந்தை ஆதரிப்பதாக கூறிய நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புரட்சி தலைவி அம்மா அதிமுகவும் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளரை ஆதரிப்பதாக கூறியுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் வசம் 12 எம்எல்ஏக்கள் மற்றும் 12 அமைச்சர்கள் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு ஒரு புறம் இயங்கிக்கொண்டிருக்கையில், அதிமுக துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் உள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை டிடிவி தினகரன், அமைச்சர் தம்பிதுரை ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சென்று பார்த்து வந்துள்ளனர். மேலும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் அவரை இல்லத்தில் சந்தித்தனர். திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக டிடிவி தினகரனை சந்தித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சசிகலாவின் பரிந்துரையின் பேரில் தான் தனக்கு திருவாடனை தொகுதியில் சீட் கிடைத்ததாகவும், அதனால் அவர் எடுக்கும் முடிவை பொறுத்து குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தருவேன் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி