ஆப்நகரம்

அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

Samayam Tamil 25 Jan 2019, 12:01 am
கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் - பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரட்டனப்பள்ளிஅரசு மேல்நிலைப்பள்ளியில்,தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர்சங்கத்தலைவர் வெற்றிச்செல்வன்தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் கலந்துக் கொண்டு,இப்பள்ளியில் படிக்கும் 140 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய சட்ட மன்ற உறுப்பினர் இராஜேந்திரன், கிராமப்புரத்திலிருந்து இப்பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு, இந்த மிதிவண்டிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதன் மூலம் மாணவர்களின் நேரம் சேமிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும் பள்ளிக்கு சுற்று சுவர் கட்ட சுமார்ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்த சட்டமன்ற உறுப்பினருக்கு, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிக்கப்பட்டது.

இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

அடுத்த செய்தி