ஆப்நகரம்

தோஷம் நீங்க பெண்ணை நிர்வாணமாக நிற்கச் சொன்ன சாமியாரின் நாக்கு அறுப்பு

தோஷம் நீங்க நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று பெண்ணுக்கு கட்டளை பிறப்பித்த சாமியாரின் நாக்கை அந்தப் பெண்ணின் உறவினர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 11 Nov 2016, 3:01 pm
தோஷம் நீங்க நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று பெண்ணுக்கு கட்டளை பிறப்பித்த சாமியாரின் நாக்கை அந்தப் பெண்ணின் உறவினர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil priest asks woman to remain as nude for the pooja
தோஷம் நீங்க பெண்ணை நிர்வாணமாக நிற்கச் சொன்ன சாமியாரின் நாக்கு அறுப்பு


ராமநாதபுரம் அருகே முதுகுளத்தூர் அடுத்த மணலூரில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வீடு கட்டி வருகிறார். இவருக்கு தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வீடு கட்ட முடியாமல் இருந்துள்ளார். இந்தத் தடைகளை நீக்க வேண்டும் என்று மதுரையில் உள்ள முத்துக்குமார் என்ற சாமியாரை அணுகியுள்ளார். அந்தப் பெண் வீடு கட்டி வரும் இடத்தில் பரிகார பூஜை செய்வதற்கு சாமியார் வந்துள்ளார். அப்போது, பூஜை செய்யும் இடத்தில் அந்தப் பெண் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று சாமியார் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை, தனது சகோதரர் மற்றும் உறவினர்களிடம் அந்தப் பெண் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்து அந்த இடத்திற்கு வந்த அவரது சகோதரர் பாண்டி மற்றும் உறவினர்கள் அவரது நாக்கை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அலறி துடித்த சாமியாரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிலர் சேர்த்தனர்.

இதுகுறித்து கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் விசாரணை நடத்தி பாண்டியை கைது செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி