ஆப்நகரம்

Namakkal Anjaneyar Temple: 8 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த அர்ச்சகர் உயிரிழப்பு!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகர் தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்ததைத் தொடர்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2019, 11:21 am
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகர் தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்ததைத் தொடர்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil priest


நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தவர் திரு.ராஜன் (எ) வெங்கடேஷ் (53). நேற்று வழக்கம் போல் ஆஞ்சநேயரருக்கு அபிஷேகம் செய்வதில் ஈடுபட்டுள்ளார். அப்போது, 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் விக்கிரகத்திற்கு 8 அடியில் இருந்து அர்ச்சகர்கள் நடந்து செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, அபிஷேகம் போன்றவற்றை அர்ச்சகர்கள் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை வெங்கடேஷ் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கீழே விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பூஜையின் போது அர்ச்சகர் கீழே விழுந்து படுகாயம்காரணமாக அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது.

Also Read This: ஆஞ்சநேயர் கோயிலில் பூஜையின்போது கீழே விழுந்த அர்ச்சகர் மரணம்!!

Also Read This: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பூஜையின் போது அர்ச்சகர் கீழே விழுந்து படுகாயம்
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு நிறைய ரத்தம் தேவைப்படுகிறது. அதனால், ரத்தம் கொடுக்க விரும்புவோர் நாகராஜன் 94433 93100 மற்றும் கிருஷ்ணமூர்த்தி 94426 32527 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். மிக மிக அவசரம். எந்த குருப்பாக இருந்தாலும் சரி. தொடர்பு கொண்டு ஆதரவு தாரீர் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து கோயில் அதிகாரி கூறுகையில், மிகப்பழமை வாய்ந்த நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த வெங்கடேஷ், அவரது சகோதரர் நாகராஜனுக்கு உதவி அர்ச்சகராகப் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி