ஆப்நகரம்

கொரோனா தடுப்பு மருந்து: முதல்வரை அழைத்த பிரதமர்!

கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி நாளை (நவம்பர் 24) ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 23 Nov 2020, 9:18 am
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
Samayam Tamil eps meet modi


கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது தொடர்பாக நாளையும், நாளை மறுநாளும் (நவம்பர் 24, 25) பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். கொரோனா தடுப்பு மருந்தை யாருக்கு எப்படி பயன்படுத்துவது என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

அதிமுக 117 - பாஜக 117: அமித் ஷா வைக்கும் டிமாண்ட்!

முதல் நாளில் எட்டு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனையில் கலந்துக் கொள்கின்றனர். இரண்டாவது நாளில் எஞ்சிய மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனையில் பங்குபெற உள்ளனர்.

சம்மதிக்காத ரஜினி; மனம் மாறிய சசிகலா: கூட்டணிக்கு பின்னால் உள்ள கணக்கு!

தேசிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சில நாட்களாக 50,000க்கும் குறைவாகவே இருந்தபோதிலும், பல நகரங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகின்றன. இதன் விளைவாக சில நகரங்களில் பொது முடக்கம் உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி