ஆப்நகரம்

தனி ஈழ நாடு அமைய வேண்டும்: இந்து மக்கள் கட்சி

இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் அமைய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 May 2018, 1:56 am
இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் அமைய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil arjun sambath


கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உச்சகட்ட போரின் போது, அந்நாட்டு அரசால் லட்சகணக்கான தமிழர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். போர் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட வடுகள் இலங்கை தமிழர்கள் மனங்களில் இன்னும் நீங்கவில்லை.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று, இலங்கை போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு தர்ப்பனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு தர்ப்பனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இலங்கையல் தனி ஈழ நாடு அமைந்தால் மட்டுமே அவர்களுக்கும் இந்தியாவுக்கும் பாதுகாப்பாய் அமையும் என்று தெரிவித்தார்.


போரின் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்காக ஒருவார கால நினைவு அனுசரிப்பு நிகழ்வை கடந்தாண்டு இலங்கையில் உள்ள சில தமிழ் அமைப்புகள் தொடங்கின. இனப்படுகொலைக்கு எதிரான நினைவேந்தல் வாரம் என்று இதனை அந்த அமைப்புகள் அறிவித்தன.

அடுத்த செய்தி