ஆப்நகரம்

சிறைக் காவலர் நாகர்கோவிலில் மர்ம மரணம்: அதிகாரிகள் காரணமா?

சிறைக் காவலர் ஒருவர் மர்ம மரணம் அடைந்துள்ள சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

TNN 27 Oct 2016, 2:52 am
நாகர்கோவில்: சிறைக் காவலர் ஒருவர் மர்ம மரணம் அடைந்துள்ள சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil prison guard mysterious dead in nagercoil
சிறைக் காவலர் நாகர்கோவிலில் மர்ம மரணம்: அதிகாரிகள் காரணமா?


கடந்த 10 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட சிறைச் சாலையில் பணியாற்றி வந்த தினேஷ் எனும் காவலர், தனது பணியை முடித்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பியுள்ளதாக தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து, அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மூத்த அதிகாரிகளின் தொந்தரவு காரணமாக தினேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அப்பகுதி வாசிகள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.

தினேஷின் உடலை கைபற்றியுள்ள போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Prison guard mysterious dead in Nagercoil

அடுத்த செய்தி