ஆப்நகரம்

கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

புழல் சிறையில் கடந்த 2 நாட்களாக 12 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

TNN 23 Oct 2016, 8:31 am
திருவள்ளூர்: புழல் சிறையில் கடந்த 2 நாட்களாக 12 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Samayam Tamil prison mates withdraw their hunger strike
கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்


சிறைத்துறை கண்காணிப்பாளர் அன்பழகன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கை பூந்தமல்லிக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புழல் சிறையில் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 12 கைதிகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக ஜாமீன் வழங்கப்படாததை கண்டித்தும், கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி