ஆப்நகரம்

முதன் முதலாக சிறை கைதிகள் மூலம் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்!

தமிழகத்தில் முதன்முறையாக சிறைக் கைதிகள் மூலம் பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டு இயக்கப்படுகிறது. இது சிறைக்கைதிகள் மத்தியில் பெரும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Feb 2019, 11:22 pm
தமிழகத்தில் முதன்முறையாக சிறைக் கைதிகள் மூலம் பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டு இயக்கப்படுகிறது. இது சிறைக்கைதிகள் மத்தியில் பெரும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil முதன் முதலாக சிறை கைதிகள் மூலம் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்!
முதன் முதலாக சிறை கைதிகள் மூலம் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்!


தமிழகத்தில் வேலூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, கோவை ஆகிய 4 இடங்களில் சிறைக்கைதிகள் மூலம் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்கை முதல்வர் பழனிசாமி நேற்று (பிப். 22) தொடங்கி வைத்தார். கைதிகளின் நன்னடத்தை மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் பெட்ரோல் பங்க்கில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் பங்க் அருகிலேயே சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் அங்காடியும் உள்ளது.

புதுக்கோட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனமும் சிறைத்துறையும் இணைந்து உருவாக்கியுள்ள பெட்ரோல் பங்க் முதல் விற்பனையை டிஐஜி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். சிறைத்துறையின் இந்த முயற்சி மூலம் கைதிகளின் வாழ்வில் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதாகவும், அவர்கள் திருந்தி நல்வாழ்வு பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று டிஐஜி சண்முகசுந்தரம் கூறினார். கைதிகளின் நலனில் அக்கறை கொண்ட சிறைத்துறை அதிகாரிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி