ஆப்நகரம்

லுங்கி மூலம் எஸ்கேப் ஆன பலே விசாரணைக் கைதி மீண்டும் கைது!

வேலூர் மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி ஒருவர் இன்று காலை தப்பி ஓடினார். அவரை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்

TNN 14 Dec 2017, 8:32 pm
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி ஒருவர் இன்று காலை தப்பி ஓடினார். அவரை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil prisoner who escaped from the vellore central prison has been caught by police
லுங்கி மூலம் எஸ்கேப் ஆன பலே விசாரணைக் கைதி மீண்டும் கைது!


தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிறைச்சாலை என்று வேலூர் மத்திய சிறைச்சாலை அழைக்கப்படுகிறது. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என தனித்தனியே அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 10ஆம் தேதி, சின்னக்கந்தலியைச் சேர்ந்த சகாதேவன் என்பவர் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.இவரிடம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, சகாதேவன் இன்று காலை சிறையின் பின்புறம் உள்ள மரத்தில் லுங்கியைக் கட்டி, சுற்றுச்சுவரில் ஏறி தப்பி ஓடினார். இதைத் தொடர்ந்து தப்பியோடிய சகாதேவனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தப்பியோடிய சகாதேவனைப் போலீஸார் இன்று மாலை மீண்டும் பிடித்து கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி