ஆப்நகரம்

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடையே சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற திடீர் மனு!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகாலை சென்னை சிறைக்கு மாற்றவேண்டும் என்ற மனு இரு மாநில செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

TNN 20 Jul 2017, 11:16 am
சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகாலை சென்னை சிறைக்கு மாற்றவேண்டும் என்ற மனு இரு மாநில செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil prisoners right forum seeking sasikala transfer tamilnadu jail
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடையே சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற திடீர் மனு!


கடந்த பிப்ரவரி மாதம், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனைக்காக சென்ற இடத்தில், 5 தனி அறைகளுடன் கூடிய இடத்தை சசிகலா இருப்பதற்காக தன் காட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதோடு, தனக்கென தனியாக சமைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதோடு, சசிகலா தனக்காக ஒரு மெத்தை உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக, கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா வீடியோ ஆதாரங்களுடன் தெரியப்படுத்தினார்.

இதையடுத்து சசிகலாவை சாதாரண கைதிகள் அடைக்கப்படும் இடத்தில் அடைக்கப்பட்டார்.

சசிகாலாவின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவரை சென்னை சிறைக்கு மாற்றுமாறு, சிறைக்கைதிகள் உரிமை மையம் சார்பில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் மனு அனுப்பியுள்ளது. இந்த மனுவை கர்நாடக தலைமை செயலாளர் மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் ஐ.நா மனித உரிமை விதிப்படி, கைதி வசித்த இடத்திற்கு அருகில் உள்ள சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் அவர் தனது குடும்பத்தாரை சந்திக்க வசதியாக இருக்கும். அதனால் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி