ஆப்நகரம்

மதுரை தனியாா் வங்கி கிளையில் தீ விபத்து

மதுரை கே.கே.நகரில் செயல்பட்டு வந்த தனியாா் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் சேதமடைந்ததாக தகவல்.

Samayam Tamil 18 May 2018, 1:16 pm
மதுரை கே.கே.நகரில் செயல்பட்டு வந்த தனியாா் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் சேதமடைந்ததாக தகவல்.
Samayam Tamil Fire


மதுரை கே.கே.நகாில் தனியாா் வங்கி கிளை ஒன்று செயல்பட்டது. இன்று காலை அந்த வங்கி கிளையின் காப்பீட்டு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காலை 8 மணி முதல் கரும்புகை வெளி வந்ததைத் தொடா்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தியணைப்புத் துறையினா் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. விபத்து காலை நேரம் ஏற்பட்டதால் ஊழியா்கள் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் பல ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என்று அலுவலா்கள் தொிவித்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி