ஆப்நகரம்

கொடக்கானலில் பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

பழனி – கொடைக்கானல் மலைப்பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

TNN 7 Mar 2017, 10:01 am
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பெங்களூருக்கும், அதேபோல், பெங்களூருவில் இருந்து கொடைக்கானலுக்கும் டிராவல்ஸ் சுற்றுலா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று பெங்களூருவில் இருந்து கொடைக்கானலுக்கு புறப்பட்டு வந்தது.
Samayam Tamil private bus accident in palani kodaikanal roadside
கொடக்கானலில் பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்


நேற்று காலை 4 மணியளவில் பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் 7வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிராக வந்து கொண்டிருந்த வாகனத்திற்கு வழி விடும் நோக்கத்தில் பஸ்டை சாலையோரமாக திருப்பியிருக்கிறார் டிரைவர். ஆனால், எதிரபாராத விதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த 30 பேர் காயத்துடன் கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

private bus accident in palani - kodaikanal roadside.

அடுத்த செய்தி