ஆப்நகரம்

எங்களுக்கு மாசம் ரூ.10,000 தாங்க; தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அரசு உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

Samayam Tamil 10 Jul 2020, 8:41 pm
கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு கடந்த நான்கு மாதங்களாக அனைத்து துறையினரும் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில், கல்வி நிலையங்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த பாதிப்பினை போக்கும் வகையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை தச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளதால் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதால் எங்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிர்வாகத்தினர் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழக முதல்வருக்கு புதிய பட்டம்: இனி “Paul Harris Fellow” என்று அன்போடு அழைக்கப்படுவார்

இந்த காலகட்டத்தில் பல தொழிலாளர்களுக்கு நிதி உதவிகள் அளிக்கப்பட்டது போல எங்களுக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் போல் வழங்க வேண்டும். அதேபோல தற்போது பள்ளி நிர்வாகமும் சிரமத்தில்தான் உள்ளது அதை கருத்தில் கொண்டு பள்ளி வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். RET நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி