ஆப்நகரம்

மதுரையில் ரயிலை சிறைபிடித்து தொடரும் போராட்டம் கைவிடப்பட்டது

மதுரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ரயிலை சிறைப்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 23 Jan 2017, 5:22 pm
மதுரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ரயிலை சிறைப்பிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil pro jallikattu protest still continues rail roko in madurai
மதுரையில் ரயிலை சிறைபிடித்து தொடரும் போராட்டம் கைவிடப்பட்டது


ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நிரந்தர தீர்வு சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழகம் முழுவதும் 7 நாட்கள் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில். இன்று போராட்டகாரர்களை கலைந்து செல்லும் படி நடத்திய பேச்சுவார்த்தை தடியடிக்கு சென்றது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் போர்களமாக காட்சியளிக்கின்றது.



இந்நிலையில் மதுரையில் ரயிலை சிறைப்பிடித்து போராட்டம் நடந்து வருகின்றது. போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.



இருப்பினும் அங்கிருந்து மக்கள் வைகை நதியிலும், ரயில் மீது ஏறியும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் கூறியதை கேட்டு போராட்டத்தை கைவிடுவதாக கூறி மக்கள் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி