ஆப்நகரம்

சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சசிகலா மனு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

TNN 22 Aug 2017, 10:51 am
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Samayam Tamil probe on sasikalas appeal on disproportionate assets case to be held today
சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சசிகலா மனு


ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால் மற்ற மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்கிரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சசிகலா உள்ளிட்ட மூவரும் தாக்கல் செய்த சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இந்த சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த இந்த மனுவை நீதிபதிகள் அமித்தவா ராய், பாப்தே அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

அதிமுக அணிகள் இணைப்புக்குப் பின், விரைவில் பொதுக்குழு கூடி சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அவரும் அவரது குடும்பத்தினரும் அதிமுகவிலிருந்து ஒதுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் இன்று உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி