ஆப்நகரம்

நிா்மலாதேவி விவகாரம்: பேராசிரியருக்கு மே 14 வரை காவல்

பேராசிரியை நிா்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிாியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமிக்கு மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Apr 2018, 1:17 pm
பேராசிரியை நிா்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிாியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமிக்கு மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Nirmala devi.


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் தொலைபேசியில் உரையாடிய பேராசிாியை நிா்மலாதேவி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவா் கொடுத்து தகவல்களின் அடிப்படையில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக உதவி பேராசிாியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

உதவி பேராசிாியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி இருவரது விசாரணைக் காவலும் முடிவடைவதால் இருவரும் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்ற நீதிபதி பரமசிவம் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். விசாரணை இறுதியில் இருவரையும் வருகிற மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

அடுத்த செய்தி