ஆப்நகரம்

Nirmala Devi Audio: வீட்டின் பூட்டை உடைத்து பேராசிரியை நிர்மலா தேவி கைது!

அருப்புக்கோடையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறி பேராசிரியை நிர்மலா தேவி வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 17 Apr 2018, 12:29 pm
அருப்புக்கோடையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறி பேராசிரியை நிர்மலா தேவி வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil devi


விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியாா் கல்லூாியில் பேராசிரியையாக பணியாற்றி வருபவா் நிர்மலா தேவி. கடந்த சில தினங்களாக நிர்மலா தேவியின் பெயரில் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.

அந்த ஆடியோ பதிவில், கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசும் பேராசிரியை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனா். அவா்களது விருப்பத்திற்க நீங்கள் சம்மதம் தெரிவித்தால் அவா்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் மாதம் தோறும் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும். இந்த விவகாரம் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனால், கல்லூரி முன்பு திரண்ட மாதர் சங்கத்தினர் நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்ற கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நிர்மலா தேவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு, உள்ளேயே இருந்துள்ளார். இதையடுத்து, பல மணி நேரத்திற்குப் பிறகு நிர்மலா தேவியின் கணவர் கண் முன்னே வீட்டின் பூட்டை உடைத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உயர் மட்டக்குழு விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தவிட்டுள்ளார். மேலும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் விசாரணை மேற்கொள்வார் என்று உத்தரவிட்டுள்ளார்.

Also Watch: Professor Nirmala Devi Arrest Video

அடுத்த செய்தி