ஆப்நகரம்

சசிகலா முதல்வராக கூடாது : மெரினாவில் தடையை மீறி கொத்தனார் போராட்டம் !

தமிழக முதல்வராக கூடாது என மெரினாவில் தடையை மீறி கொத்தனார் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.

TOI Contributor 12 Feb 2017, 12:18 pm
சென்னை: தமிழக முதல்வராக கூடாது என மெரினாவில் தடையை மீறி கொத்தனார் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.
Samayam Tamil protest against in marina to sasikala not sworn in as chief minister
சசிகலா முதல்வராக கூடாது : மெரினாவில் தடையை மீறி கொத்தனார் போராட்டம் !



சென்னை மெரினாவில் போராட்டம், உண்ணாவிரதம் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் காந்திசிலை முன்பாக சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோ‌ஷங்கள் எழுப்பியபடி ஒருவர் வந்தார்.

இவரை தடுத்து நிறுத்திய போலீசார் மெரினா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரை, இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் விசாரித்தார். அதில் அவர் திருச்சி மாவட்டம் நாகமங்கலம் போலார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த அருள்பிரகாசம் (44 வயது) என்பது தெரியவந்தது. அவர் கொத்தனார் வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவர் மகனுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். பின் அவரது மகன் சென்னைக்கு அருள்பிரகாசத்தை அழைத்து சென்றனர். போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

அடுத்த செய்தி