ஆப்நகரம்

பினாமி அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாளை அறவழிப் போராட்டம்!

புதிதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, சசிகலாவின் பினாமி அரசு, அதை நீக்கக் கூறி நாளை தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் செய்யப்பட உள்ளது.

TNN 17 Feb 2017, 4:54 pm
மதுரை : புதிதாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, சசிகலாவின் பினாமி அரசு, அதை நீக்கக் கூறி நாளை தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் செய்யப்பட உள்ளது.
Samayam Tamil protest against new tn government
பினாமி அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் நாளை அறவழிப் போராட்டம்!


ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என கூறி அதற்கு நிரந்த சட்டம் வேண்டும் என கூறி தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது. அதே போல புதிதாக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு சசிகலாவின் கைக்கூலி அரசு, அதை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “மன்னார்குடியிலிருந்து வந்த மாபியா கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களை உடைத்து மக்களுக்கு எதிராக அவர்களின் கைக்கூலியை முதல்வர் ஆக்குவது தான் ஜனநாயகமா?. ஜெயிலில் இருந்தே ஆட்சி செய்வேன் என்கிறார் சசிகலா தமிழர்களே!! தமிழ்நாட்டை காப்பாற்ற அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம்! ஒன்று கூடுவோம் ஒரு குடும்ப ஆட்சியை முறியடிப்போம்.”
என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.





இந்த அறிவிப்பு அனைத்து சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மதுரையில் தமுக்க மைதானத்திலும், கோவையில் வா.உ.சி மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

அடுத்த செய்தி